தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி. இவர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். நடிகை த்ரிஷாவை காதலித்து வந்த இவர் பின்னர் இவர்களுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தெலுங்கு நடிகர் ராணா கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார். அந்த ட்வீட்டை பார்த்து பலரும் வியந்தார்கள்.


இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
அதைத்தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது போன்ற  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ராணா.