சென்னை,

பொறியியல் படிப்பிற்கான  ரேண்டன் எண்-ஐ அண்ணா பலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைகத்தின் கீழ் சுமார் 550 பொறியியல் கல்லூரிகளில் , பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவது வழக்கம்.

ஏற்கனவே பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் மே 1 முதல் 31 வரை கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 1.68 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, ‘ரேண்டம்’ எண், இன்று(ஜூன் 20) வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ரேண்டம் எண்ணை, உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல் வெளியிட்டார். விண்ணப்பித்த ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனி ‘ரேண்டம்’ எண் உருவாக்கப்படும். ஒரே மாதிரியாக, ‘கட் ஆப்’ பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, ‘ரேண்டம்’ எண் மூலம் முடிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்த விவரங்களை அண்ணா யுனிவர்சிட்டி இணைய தளங்களில் பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.