புதுடில்லி: இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்களிலிருந்து தப்பிப்பதற்காக ஐ.நா.விடம் இருந்து அகதி அந்தஸ்தைப் பெறுவதற்காக, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்குள்ளான, சுய பாணியிலான ஆன்மீக குருவாகக் கூறிக்கொண்ட நித்யானந்தா ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த மனுவில் இந்தியாவை இழிவுபடுத்தியுள்ளார்.

இவர் ட்ரினிடாட் அருகே ஒரு தீவில் தங்கியிருந்து அந்தத் தீவில் தனது கூட்டத்துடன் வசிக்க ஐநாவிடம் அகதி அந்தஸ்தைக் கோருவதாக இதன் மூலம் அறிய முடிவதாக செய்திகள் கூறுகின்றன.

ஆதி சைவ பாரம்பரியத்தை பின்பற்றி பரப்பியதற்காக துன்புறுத்தப்படுவதாகக் கூறி, நித்யானந்தா பல அரசியல் கட்சிகள், மத மற்றும் சமூக அமைப்புகள், மொழியியல் குழுக்கள்,காவல்துறை மற்றும் இந்திய நீதிமன்றங்களை கூட இழிவுபடுத்தியுள்ளார். ஆத்திரமூட்டும் மொழியை பயன்படுத்தி 46 பக்க மனுவை ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளார்.

நாட்டின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில்  இந்தியா சட்ட முறைமைக்கு எதிரான கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதானது: ‘இந்திய நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை மருத்துவ நடைமுறைகளுக்கு உட்படுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றன, அங்கு அவர்கள் மூன்றாம் தரப்பினரால் சித்தரவதைக்குள்ளாக்கப் படுகிறார்கள்“, என்று குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல், பலவந்தமாக சிறைப்படுத்துதல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இந்தியாவில் ஒரு டஜன் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட அவர்,  கடந்த பத்தாண்டுகளில் தீவிரவாத இந்துத்துவ சக்திகளால் தனது வாழ்க்கையில் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சதி முயற்சிகளை அவர் சகித்ததாகவும், அப்போது காவல்துறை செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆளும் கட்சிகளின் உத்தரவின் பேரில் இந்த புகார்கள் குறித்த உண்மை என்னவென்றால், கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட மோசடியின் பெரும்பான்மையான கடுமையான மற்றும் வெட்கக்கேடான கூற்றுக்கள் எந்த ஆதாரங்களுடனும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

நன்றி: ரிபப்ளிக் தொலைக்காட்சி