நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல்பதிவு

கிராமத்தில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம்..

நேற்று முன்தினம் இரவு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கொடூரத்தில் ஈடுபட்டிருந்த 35 வயது அன்கித் என்பவ னை பிடித்து ஜானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்..

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மீரட் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்துபோனார்..

கடந்த வாரம் இதே உபியில் தான், ஷாஜகான்பூர் அருகே சதார் என்ற பகுதியில் 12 வயது சிறுமி கரும்பு தோட்டத்தில் பிணமாக வீசப்பட்டு கிடந்தாள்..

ஆறாம் வகுப்பு மாணவியான அவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அஜய் நகரே மிரண்டுபோயிருக்கிறார்..

காரணம்..சிறுமியின் அந்தரங்கமும் முகமும் சிதைக்கப்பட்டிருந்ததை போல ஒரு கொடூரத்தை
தன் வாழ்நாளில் பார்த்ததேயில்லை என்கிறார் அந்த டாக்டர். அஜய்..

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பியில் தற்போது மட்டுமல்ல..காலம் காலமாகவே இப்படித்தான்.. அந்த அளவுக்கு இருக்கிறது, மக்கள் மனதில் நாகரீக வளர்ச்சியின் வேகம்..