விசாரணைக்கு ஆஜராகாமல் ‘டிமிக்கி’: நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு
பெங்களூரு:
பாலியல் வன்கொடுமை வழக்கில்., விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த நித்தியானந்தா வுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை கர்நாடக நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.
பெங்களூரில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் உள்ள பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூர் ராம்நகர் போலீசார் நித்தியானந்தாவை கைது செய்து மைசூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவருக்கு ஆண்மை பரிசோதனைசெய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 6ம் தேதியன்று விசாரணைக்கு நிதிதியானந்தா ஆஜரானார். அதன்பிறகான எந்தவொரு விசாரணைக்கும் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இதனால், நீதிமன்றம் அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தது.
‘இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார்.
மனுவில், நித்தியானந்தா வடமாநிலங்களில் ஆன்மீக சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இதனை நீதிபதி ஏற்க மறுத்த நீதிபதி, தொடர்ந்து 3 வது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் , நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டு பிப்பித்து அதிரடி உத்தரவிட்டார்.
இதன் காரணமாக நித்தியானந்தா கைது செய்யப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.