அகமதாபாத்:

பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு சூரத் நீதிமன்றம்  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயணன் சாயும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  சாமியார் ஆசாராம் பாபு அவரது மகன்  நாராயணன் சாய் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, நாராயண் சாயிக்கு எதிரான 50க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாராயண் சாய் தலைமறைவானார்.

ஆனால், அவரை காவல்துறை யினர் கைது செய்த நிலையில், பாலியல் முறைகேட்டு வழக்கில் சாய் குற்றவாளி என கடந்த 26ந்தேதி  நீதி மன்றம் அறிவித்தது. அதையடுத்து, ஏப்ரல் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாராயணன் சாய் என்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதி மன்றம், அவருக்கு  ஆயுள் தண்டனையுடன்,  ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

ஏற்கனவே  சாமியார் ஆசாராம் பாபு  ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.