அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

coma

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, அவரது குடும்பத்தார் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். கிட்டத்தட்ட அந்த பெண் 14 ஆண்டுகளாக கோமாலிவேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அந்த பெண் கர்ப்பம் அடைந்திருப்பது சோதனையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கோமாவில் இருந்தபடியே அந்த பெண்ணிற்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தார் மிகுந்த அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோமாவில் இருந்த பெண் கர்ப்பம் தரித்த சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.