டில்லி:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இன்று கவுகாத்திக்கு செல்வதற்காக டில்லி விமான நிலையம் வந்தார்.

 

அங்கு பயணிகள் விமானத்தில் ஏறியவுடன் தனது இருக்கைக்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது ஒரு  பயணி தனது உடமையை இருக்கைக்கு மேல் உள்ள இடத்தில் வைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதை கண்ட ராகுல்காந்தி உடனடியாக  பெட்டியை அந்த  பயணியிடம்   இருந்து வாங்கி மேலே வைத்து உதவி செய்தார். இதற்காக அந்த பயணி அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைராகியுள்ளது. அதோடு விமானத்தில் இருந்த சக பயணிகள் ராகுல்காந்தியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.