ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கும் நிலையில் ராம் சரணின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவியை படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தெலுங்கின் சென்சேஷனல் இசையமைப்பாளராக இருப்பதால் ஷங்கர், ராம் சரண் படத்தில் தமனை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஹைதராபாத் செய்திகள் கூறுகிறது .

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவுடன் பேசியுள்ளனர்.