மும்பை:

ந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிவித்துள்ளது.

ஏற்கனவே  பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருந்த அனில்கும்ளே பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் மனு செய்யலாம் என அறிவித்திருந்தது.

அதைத்தொடர்ந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உள்பட பலர் விண்ணப்பித்திருந்தனர்

இந்நிலையில் இன்று நடைபெற்ற  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கூட்டத்தில்   இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமனம் செய்வதாக  கிரிக்கெட் ஆலோசனை குழு (சிஏசி) அறிவித்து உள்ளது,.

2019 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் அடுத்த ஐசிசி உலகக் கோப்பை வரை புதிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.