டில்லி

ந்திய ரிசர்வ் வங்கி புதிய பத்து ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அவ்வரிசையில் பத்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

இந்த நோட்டுக்களின் மாதிரி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாக்லேட் கலரில் உள்ள இந்த நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உரிஜித் படேல் கையெழுத்து உள்ளது.

இந்த நோட்டில் காந்தியின் புகைப்படமும் கொனரக் சூரிய கோயிலின் முத்திரையும் காணப்படுகிறது.