தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர் ஜெனிலியா. தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இந்நிலையில் இந்த ஜோடிக்கு 2014ஆம் ஆண்டு ரியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 2016ஆம் ஆண்டு ரேயல் என்ற இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.
இவர் படங்களில் நடித்து எட்டு வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி படத்தில் இவர் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.