டில்லி:

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஆதாருக்கு எதிரான ஒரு வழக்கில் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வுதான் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிவித்தது.

பல்வேறு நலத்திட்டங்களில் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.