மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

AV 31 படத்தை அறிவழகன் இயக்குகிறார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஜிந்தாபாத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது

தற்போது இந்த ஷூட்டிங்கில் ஹீரோயின்களில் ஒருவரான ரெஜினா இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.