புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன.
இந் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதம் புதுச்சேரியில் 6வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்த தளர்வுகளும் இன்றி புதுசேரியிலும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். வரும் ஞாயிறு கடைசி முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது என்று தெரிவித்து உள்ளார்.