கன்னியாகுமரி:

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஒகி புயலால் கன்னியாகுமரியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள், பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படும்.

மாவட்ட கலெக்டர் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.