வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரம்

 


திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்குப் படிப்பில் கவனக்குறைவு, அடிக்கடி விபத்து கண்டங்களைச் சந்திப்பது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரத்தைப் பார்க்கலாம்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்குப் படிப்பில் கவனக்குறைவு, காதல் கலப்பு திருமணம் நிகழ்வது, அடிக்கடி விபத்து கண்டங்களைச் சந்திப்பது, எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவன் போல் வாழ்வது போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

பரிகாரம்
* தினமும் ராகு வேளையில் துர்க்கை, காளி, பிரத்யங்கரா தேவி வழிபாடு சிறப்பான பலன் தரும்.
* வளரும் புற்றிற்குச் சென்று வழிபாடு செய்தல்
* பஞ்சமி திதியில் கருட வழிபாடு
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.
* ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி, வீட்டின் வாசலில் தொங்க விட வேண்டும்.