லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் வாடகை சைக்கிள் திட்டத்தை மேயர் சம்யுக்தா தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாடகை சைக்கிள் வசதியை பயன்படுத்த விரும்புவோர் ஸ்மார்ட் போனில் ‘ஜூம்கார்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் போன் நம்பரை பதிவு செய்து, வாடகை சைக்கிள் வசதியை பெறலாம்.

ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய இந்த சைக்கிள்களின் பூட்டை, ரகசிய குறியீட்டு எண் மூலம் திறக்கலாம். இதற்கான கட்டணம் ‘பே – டிஎம்’ மூலம் செலுத்தலாம். முதல் கட்டமாக 12 இடங்களில் இந்த வசதி கிடைக்கும். சைக்கிளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

விரைவில் அனைத்து இடங்களிலும் ஒப்படைக்கும் வசதி ஏற்படுத்தப்படும். 24 மணி நேர சேவை கொண்ட இந்த திட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2 ரூபாய் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.