சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கியதும் பழைய வண்ணாரப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பின்னர் திருவொற்றியூர் பகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது.

இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தனது வாக்கை பதிவு செய்த திமுக வேட்பாளரான மருதுகணேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆர்.கே. நகரில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி வருவதாக தகவல் வருகின்றன. இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்படும் என்று கூறினார்.