தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே கூறியுள்ளனது.
அதனால், இடஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது’ என்று வாதிட்டார். இந்த வழக்கில் “மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது பெருமைக்குரியது” என்றும் கூறினார்.
இதையடுத்து தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், “உச்சநீதி மன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும். மத்திய அரசு, மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே ஆகும்.
இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்காததால் 2,700-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட தமிழக மாணவர்களின் இடம் பறிபோனது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகி மத்தியஅரசின் கருத்துக்களை தெரிவித்தனர்.
“மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படியே எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதி மன்ற தீர்ப்புகள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோட்டின் முந்தைய உத்தரவுகளுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்பட வில்லை? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோட்டின் முந்தைய உத்தரவுகளுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்பட வில்லை? என்று கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற 27ந்தேதி பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.