ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து 40 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் தந்தை கேகே சிங் பாட்னா போலீஸில் சுஷாந்த் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். சுஷாந்த்துக்கு ஓவர் டோஸ் மாத்திரைகளை அளித்த ரியா, அவரை மிரட்டி இருக்கிறார். சுஷாந்த் கணக்கிலி ருந்து 15 கோடி மாயமாகி இருக்கிறது. சுஷாந்தின் வங்கி கணக்குகளை ரியா தான் கையாண்டு வந்திருகிறார். தற்கொ லைக்கு அவரும் அவரது ஆட்களும் தான் தூண்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் கூறி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாட்னா போலீசார் வழக்குப் பதிவு செய்துள் ளனர்.
இதையடுத்து ரியா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார், அதில், ’நடிகர் சுஷாந்த் சிங்குடன்சுமார் 1 ஆண்டு நான் ஒன்றாக வாழ்ந்திருக்கி றேன். கடந்த ஜூன் 8 ஆம் தேதி வரை ஒரே வீட்டில் தான் வசித்து வந்தேன். (சுஷாந்த் ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்). அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் அவரை விட்டு வந்தேன். சுஷாந்த் வழக்கில் அவரது தந்தை என்னை தவறாக இணைத்திருக்கிறார். நான் அப்பாவி. ஏற்கனவே எனக்கு கொலை, பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வந்துள்ளன. அதுபற்றி மும்பை போலீ சில் புகார் கொடுத்தேன். எனவே பாட்னாவில் என் மீது பதிவு செய்யப் பட்டுள்ள வழக்கை மும்பையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரியா ச்க்ரபோர்த்தி கூறியிருக் கிறார்.
ரியா சக்ரபோர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பதால் சுஷாந்த் தந்தை கே கே. சிங் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியெட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.