பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்பது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம், பீகார் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பாலிவுட் நடிகரின் மரணம் தொடர்பாக “சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள்” தொடர்பாக கடந்த வாரம் தனி பண மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தது.

பாந்த்ரா குடியிருப்பில் இருந்து ரியா வெளியேறிய ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 14 அன்று சுஷாந்த் இறந்து கிடந்தார்.

ரியாவின் பயண வரலாறு ஆகஸ்ட் 10, 2019 முதல் பிப்ரவரி 25, 2020 வரை. இந்த காலகட்டத்தில் ரியா பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, யுஏஇ, ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ததாக பதிவு காட்டுகிறது.

பயண பதிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்வது மிக முக்கியமானது, ஏனென்றால் 2019 அக்டோபரில் சுஷாந்த் மற்றும் ரியா ஆகியோரால் எடுக்கப்பட்ட அதே ஐரோப்பா பயணத்தில்தான் சுஷாந்த் மனநோய்க்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார்.

உண்மையில், சுஷாந்தின் சமையல்காரராகப் பணியாற்றிய அசோக் குமார் காசு, முன்பு செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம், அக்டோபர் 28, 2019 அன்று ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பின்னர் நடிகர் நிறைய மாறிவிட்டார் என்று கூறினார்.

ஐரோப்பாவில், 600 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய ஹோட்டலில் தங்கியிருந்ததாக ரியா சக்ரவர்த்தி அமலாக்க இயக்குநரக அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றன. Francisco Goya’s ‘Saturn Devouring His Son’. ஓவியத்தைப் பார்த்ததும் சுஷாந்த் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக ரியா குற்றம் சாட்டியுள்ளார்.

கே.கே.சிங் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பணமோசடி வழக்கை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது. ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் மற்றும் தந்தை இந்திரஜித் ஆகியோரின் மொபைல் போன்களை நிறுவனம் பறிமுதல் செய்துள்ளது.