“காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டார்”

தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, மலையாளத்தில் ஆபாச சினிமாக்களில் நடித்ததன் மூலம் புகழ் அடைந்தவர், ஷகீலா. அவரது வாழ்க்கை வரலாறு ‘ஷகீலா’என்ற பெயரிலேயே சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஷகீலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது குறித்து ரிச்சா சத்தா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் :

“ஷகீலாவின் கதையில் நடிக்கும் முன்பு, அவரை நேரில் சந்தித்து பேசினேன்.

தனது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமாவில் தனது போராட்டங்கள் குறித்து அவர் மனம் திறந்து என்னிடம் பேசினார். ஆரம்பத்தில் பணதேவைக்கு அவர் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் தேவைகள் அதிகரித்ததால், சில்க் ஸ்மிதா படங்களில் அவருக்கு ‘டூப்ளிகேட்டாக’ நடித்துள்ளார்.

ஸ்டார் அந்தஸ்து கிடைத்த பிறகு ஸ்மிதாவுடன் சேர்ந்தும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஷகீலா சினிமாவில் இருந்து விலகவே நினைத்தார்.

சில்க் ஸ்மிதா மரணம் அடைந்ததால், அவரது ‘வேடங்கள்’ ஷகீலாவை தேடி வந்தன. ஸ்மிதாவுக்கு மாற்றாக அவர் கருதப்பட்டார்.

எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது போல், ‘அந்தமாதிரி’ வேடங்களில் நடித்தார், ஷகீலா” என தெரிவித்துள்ள ரிச்சா சத்தா “ஷகீலாவின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள – யாரும் அறியாத சம்பவங்களை இந்த படத்தில் சொல்லியுள்ளோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.

– பா. பாரதி