ஷகீலா படத்தை அடுத்து இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கும் புதிய படம் ‘மேடம் சீஃப் மினிஸ்டர்’

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சாதாரண பெண், ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சராவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் வரலாற்றை போலவே இந்த படத்தின் கதை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில் கையில் துடைப்பத்துடன் ரிச்சா சத்தா நிற்பது போல் உள்ளது. இதற்கு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், மறுநாளே வேறு போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

ஆனாலும் ரிச்சா சத்தா மீது கோபம் தணியவில்லை.

அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் “ரிச்சா சத்தாவின் நாக்கை அறுப்போம்” என மிரட்டல் விடுத்துள்ளதால், ரிச்சா மிரண்டு போய் இருக்கிறார்.

– பா. பாரதி