டில்லி:

‘ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கில், ‘தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே’ என, உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மஹாராஷ்டிர அரசின் உத்தரவுக்கு, மும்பை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்க்கும் வழக்கு, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிமனித சுதந்திரம் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

‘என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று பிறர், நம்முடைய விருப்பத்தில் தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை. அதனால், இந்த வழக்கில், தனிமனித சுதந்திர தீர்ப்பும் பொருந்தும்’ என்று, அமர்வு கூறியது. வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.