டில்லி:

தேரா சச்சா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானாவில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 11 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான், உ.பி., டில்லி மாநிலங்களுக்கும் கலவரம் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் டில்லியில் தேரா சச்சா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனந்த்விகார் (ரெவா எக்ஸ்பிரஸ்) மற்றும் சாத்ரா ரயில் நிலையங்களில் இரு ரெயில்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

டில்லி பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனை அருகே பஸ் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனால் டில்லி எல்லை பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் டில்லியில் கலவரம் பரவியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.