பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்ப‍ையை ஏந்தும் வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது. இந்திய அணி வெல்ல, 86 பந்துகளில் 63 ரன்களே தேவை.

ஷப்மன் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் அடித்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்து ஆடி வருகிறார். அவர், தற்போதுவரை 108 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர் & 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களை அடித்து ஆடிவருகிறார்.

இவருடன் களத்தில் நிற்பவர் மயங்க் அகர்வால். அவர் 9 ரன்களை அடித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால், அது ஒரு வரலாற்று சாதனையாக அமையும்.