சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டிற்கு, முச்சதம் அடிக்கும் திறன் உள்ளது என்று பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதிலும் குறிப்பாக 23 வயதான ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார்.

நான் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராகத்தான் பார்க்கிறேன். மேலும் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடிக்கும் திறனும் உள்ளது என்று நான் நம்புகிறேன்.

முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடியிருந்தால் இந்திய அணிக்கு அது நல்ல விஷயமாக அமைந்திருக்கும். சில கேட்ச்களை அவர் தவற விட்டாலும் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை. தோனி ஸ்டைலில் அவர் விளையாடியதுபோல இருந்தது.

எம்எஸ் தோனியின் இடத்தை நிரப்ப அவரிடம் தகுதி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன கில்கிறிஸ்ட் பாணியிலும் அவர் விளையாடி வருகிறார்” என்றுள்ளார் கிளார்க்.