ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் விடுத்த சவாலை ஏற்ற ரிஷப் பண்ட் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை புத்தாண்டு அண்டு சந்தித்துள்ளார்.

rishap

ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் 4போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. அதன்பிறகு இரு அணிகளும் பங்கேற்ற 3வது டெஸ்ட் போட்டி(பாக்சிங் டே) மெல்போர்ன் நகரில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 137 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்துள்ளது.

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் மைதானத்தில் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்தார். ரோஹித் சர்மா, ரிஷப் பண்டை கிண்டலடித்து டிம் பேசிய வீடியோ வைரலாகியது. அந்த வகையில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது பின்னால் நின்றுக் கொண்டு பேசிய டிம் பெயின், “ ஒருநாள் அணிக்கு தோனி வந்துவிட்டாா். இதனால் உன்னை அணியில் இருந்து நீக்கிவிட்டனா். பிக்பாஷ் போட்டிகளில் சோ்த்துவிடவா? என் குழந்தைகளை பாா்த்துக் கொள்கிறாயா? நானும், எனது மனைவியும் படத்திற்கு செல்கிறோம் ” என்று கிண்டல் செய்தாா்.

இதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், “ நீங்கள் ஒரு தற்காலிக கேப்டன். உங்களுக்கு பேச மட்டுமே தெரியும் “ என பதிலடி கொடுத்துள்ளார். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் மைதானத்தில் வசைப்பாடி கொண்டனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் சவாலை ஏற்றார். அதன்படி டிம் பெயின் வீட்டிற்கு சென்ற ரிஷப் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை அவரது மனைவியே இணையத்தில் பதிவிட்டுள்ளார். புத்தாண்டு கொண்டாடத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.