கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். ஏப்ரல் 29 அன்று உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

நேற்று ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என குடும்பத்தினர் அனைவரிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே, ரிஷி கபூரின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படாமல் நேரடியாக மின்சார மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


மரைன் லைன்ஸ் சந்தன்வாடி பகுதியில் இருக்கும் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் ரிஷி கபூர் குடும்பத்தினருடன் ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலி கான், ஆதார் ஜெயின், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அனைவருமே முகக் கவசம், கையுறை அணிந்திருந்தனர்.