நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 664 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 12-ஐத் தொட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகர் ரிஷி கபூர் ”மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், வேறு வழியே இல்லை” என தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் , அதற்கு ஒரு ரசிகர் ‘மதுபானங்களை வாங்கி வீட்டில் வைத்து விட்டீர்களா?” என கிண்டல் செய்துள்ளார் .

இதனால் கோபமடைந்த ரிஷி கபூர் ”என் நாட்டைப் பற்றியோ என் வாழ்க்கை முறை பற்றியோ யாராவது கேலி செய்தால் அந்தப் பின்னூட்டங்கள் அழிக்கப்படும். என எச்சரித்துள்ளார் .