சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இன்றை பரிசீலனையின்போது விஷாவின் மனுவை நிறுத்தி வைத்துள்ள நிலையில், தற்போது ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27ந்தேதி தொடங்கியது.

ஏற்கனவே பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி  மற்றும் டிடிவி தினகரன் உள்பட சில சுயேச்சை கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான நேற்று   நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட சுயேச்சைகள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

நேற்றைய  வேட்புமனு தாக்கலின்போது நடிகர் விஷாலுக்கு 68வது டோக்கனும், தீபாவுக்கு 91வது டோக்கனும் கிடைத்தது.

இந்நிலையில் இன்று காலை முதல்  வேட்புமனு பரீசீலனை நடைபெற்று வருகிறது. பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஷானின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவரான ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவனங்கள் சரியாக தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையர் அவரது மனுவ தள்ளுபடி செய்தாக கூறப்படுகிறது.

மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7 ம் தேதி கடைசி தேதியாகும். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் கமிஷனால் வெளியிடப்படும்.