சென்னை,

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டு தயம்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தண்டையார் பேட்டையில் உள்ள பகுதி அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் சென்று அவர் வேட்பு மனுவை தாக்கர் செய்தார். இவர் கடந்தமுறையும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வருகின்ற டிசம்பர் 21-ம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் வேட்பாளராக மீண்டும் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டர்.

அதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம்  12 மணி அளவில்  தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.