சென்னை:

ர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ம.தி.மு.க. புறக்கணிப்பதாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழு கூட்டம்  அக்கட்சியின் தலைமையகமான சென்னை தாயகத்தில் நடந்தது.

அவைத்தலைவர் சு. துரைசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன்  உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார்.  எந்த கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.