பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் நிறைந்திருந்த பேருந்து ஒன்று, நெடுஞ்சாலையில் லாரியுடன் மோதிய விபத்தில் மொத்தம் 36 பேர் வரை இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் சாலை விபத்துகள் நடப்பது சர்வசாதாரணம் என்ற நிலை உள்ளது. ஒரு புள்ளிவிபரத்தின்படி, கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் சீனாவில் சாலை விபத்துக்களால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 58,000 என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கே சாலை விதிகள் மீறப்படுவது சர்வசாதாரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோர விபத்து நடந்த இடம் கிழக்கு ஜியாங்சு மாகாணம். அங்குள்ள எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சுமார் 69 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து ச‍ென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த லாரியின் மீது பேருந்து பயங்கரமாக மோதியதில் 36 பேர் வரை அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் டயர் வெடித்ததால், நிலைதடுமாறிய பேருந்து லாரியின் மீது மோதிவிட்டதாக கூறப்படுகிறது.