தஞ்சாவூர்:

டலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் அன்புச்செல்வனின் சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தின் ஆட்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் பணியாற்றி வருகிறார். இவரின் சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாடியம் கிராமம். இங்கு அவரது குடும்பத்துக்கு சொந்தமான வீடும் உள்ளது.

இந்த வீட்டின் பின்பக்க வீட்டின் கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள், அங்குள்ள பீரோவை உடைத்து, சுமார்  50 சவரன் மதிப்பிலான நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.