bautista-agut-2016-rotterdam-wednesdayசென்னை ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த வருடம் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் 5-வது முறையாக பங்கேற்கும் ஸ்பெயின் வீரர் ராபர்ட்டோ அகட், சிலிச்சுக்கு சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை அகட் வென்றுள்ளார்.

இதுகுறித்து அகட் கூறுகையில், “சென்னை ஓபனில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 14-ஆவது இடத்தில் இருந்து முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவேன். சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாக முயற்சிப்பேன் எனக்கூறினார்.