டுரின்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்து சாதித்துள்ளார்.

தற்போது, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், இத்தாலியின் யுவன்ட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் ரொனால்டோ. இத்தொடரில், உக்ரைனின் டைனமோ கைவ் அணிக்கெதிராக ஆடிய யுவன்ட்ஸ் அணி சார்பில் 1 கோடித்தார் ரொனால்டோ.

இதன்மூலம், இவர், கால்பந்து அரங்கில் ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

சர்வதேச கால்பந்து அரங்கில், தனது தேசிய போர்ச்சுகல் அணிக்காக மொத்தம் 102 கோல்கள் அடித்துள்ளார். கிளப் போட்டியில், ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோல்களும், யுவன்ட்ஸ் அணிக்காக 75 கோல்களும், ஸ்போர்டிங் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.