36 வயதினிலே இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூ தனது மும்பை போலீஸ் படத்தை விரைவில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். மும்பை போலீஸ் அட்டகாசமான இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர். எதிர்பாராத கிளைமாக்ஸ் டிவிஸ்டை கொண்டது.

மும்பை போலீசுக்கு பாபி – சஞ்சய் திரைக்கதை எழுதியிருந்தனர். 2013-ல் வெளியான அப்படம் வெற்றி பெற்றது.

பிருத்விராஜ், ஜெயசூர்யா, ரகுமான் நடித்திருந்த அப்படத்தை ரீமேக் செய்யும்படி பலர் முன்பே கேட்டதாகவும், விரைவில் அப்படத்தை ரீமேக் செய்யவிருப்பதாகவும் ரோஷன் ஆண்ட்ரூ, மும்பை போலீஸ் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் அறிவித்துள்ளார். அனேகமாக அந்த ரீமேக் தமிழில் இருக்கலாம்.