‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜூலை 30-ம் தேதி வெளியீடாக இருந்த இந்தப் படம், பின்னர் அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் மிகப்பெரிய சர்வதேச வெளியீடு திட்டமிட்டிருப்பதால், வெளியீட்டுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டியிருக்கிறது. ஜனவரி 8, 2021 அன்று #RRR வெளியாகும். இந்தக் காத்திருப்பு அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அதுவரை உங்களுக்குத் தொடர்ந்து படம் பற்றிய புதிய செய்திகள் வரும் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என.’ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.