சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 7 சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்தும் கணிசமான தொகை வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.