கோட்டா

மும்பை – நிஜாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரசில் 9  கோச்சுகளில் கொள்ளையர்கள் புகுந்து ரூ. 10-15 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர்.

மும்பை – நிஜாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரஸ் இந்த வழித்தடத்தில் அதிகம் விரும்ப்படும் ஒரு ரெயில் ஆகும்.    இந்த ரெயிலில் கோட்டா அருகில் சில கொள்ளையர்கள் புகுந்து ரூ,10- 15 லட்சம் வரை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மொத்தம் 9 கோச்சுகளில் (ஏசி 3 டயர், மற்றும் ஏசி 2 டயர் உட்பட) இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.   பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின் இந்த திருட்டு நடை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.    இதுவரை 11 பேர் இது குறித்து புகார் அளித்துள்ளனர்    காலி பர்சுகளும், பணப்பைகளும் கழிப்பறை அருகே இறைந்து கிடந்துள்ளது.

இது குறித்து ரெயில்வே அமைச்சர், “திருடர்களை கோச்சுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவு மூலம் கண்டுபிடிக்க முயற்சி நடைபெறுகிறது.    இது போல திருட்டுக்கள் இந்த வழித்தடத்தில் சகஜமான ஒன்று தான்.   முன்பை விட இப்போது திருட்டுச் சம்பவம் குறைந்துள்ளது” என்றார்.