லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10.000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அபராதம் விதித்து வருகிறது.

ஆனாலும் மக்கள் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாகக் கூறி அபராதத் தொகையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முதல்முறையாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்து உள்ளது.