கடலூர்: காட்டுமன்னார்கோவில் பட்டாசுஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2லட்சம் நிதி வழங்கப்படும் என  தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கிராமப் பகுதியில் உள்ள நாட்டு வெடி தயாரிக்கும்  பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9  பேர் பலியான  சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று காலையில்  எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்தில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உயிரிந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட
4 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பட்டாசுஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2லட்சம் வழங்கப்படும் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது.