டில்லி,

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களை நவீனப்படுத்த ரூ.25,060 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார்.

இதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த ஒதுக்கீட்டில், வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி நாடு முழுவதும் உள்ள  காவல்துறையை மேம்படுத்தல், பயிற்சி நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.