சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,17,027 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 3,64,60,219 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
மிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை நிலவரப்படி,  தமிழகம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,17,027 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றி  3லட்சத்து 75ஆயிரத்து 596 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
3லட்சத்துக்கு 56ஆயிரத்த 526 மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்  3 கோடியே 64லட்சத்து 60ஆயிரத்து 219 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.