சென்னை:
மிழகத்தில் ஊரடங்கை மீறி  வெளியே சுற்றிய 4லட்சத்து 27 ஆயிரத்து 689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 கோடிய 36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்கள் முதல், சாலைவிதி முறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,
தமிழகத்தில் இன்று காலை (28/05/2020) 10 மணி நிலவரப்படி,  5 லட்சத்து 08 ஆயிரத்து 263 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5 லட்சத்து 42 ஆயிரத்து 618 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
4 லட்சத்து 27 ஆயிரத்து 689 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.8 கோடிய 36 லட்சம் அபராதம் வசூல்.
இவ்வாறு  தெரிவிக்கப்பட்ட உளளது.