டெல்லி: ஜேஎன்யூ தாக்குதலை அரங்கேற்றிய இந்து ரக்ஷா தளம் அமைப்புக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை விஎச்பி தெரிவித்துள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜேஎன்யூ தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற இந்து அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதன் தலைவர் பிங்கி சவுத்ரி வெளியிட்டார்.

இந்நிலையில், ஜேஎன்யூ தாக்குதலை அரங்கேற்றிய இந்து ரக்ஷா தளம் அமைப்புக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை விஎச்பி தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் அலோக் தலைவர் கூறியதாவது: நாதுராம் கோட்சே காலம் முதற்கொண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு வீரியமிக்க அமைப்பு என்பது பலரின் எண்ணம். அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக சென்று சொந்த பலத்தில் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்துத்வா சக்திகள் என்ன செய்தாலும் அது எங்கள் மீது வந்து விழுகிறது. எங்களுக்கும் இந்த குழுவுக்கும் எக்காரணம் கொண்டும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.