தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரூபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி, சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.