சென்னை:
கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்கலாம் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி ஒரு ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு மே 31ந்தேதி வரை 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக மீண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள்  வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
21ந்தேதி முதல் 50 சதவிகிதம் அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நாளை முதல்  தமிழகத்தில் ஆட்டோக்களை  இயக்க நிபந்தனைகளுடன் அனுமதி  வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று அதிகமாகி வரும்  சென்னை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயக்கலாம்.
ஒரு ஆட்டோவில் ஒரு பயணியை மட்டுமே ஏற்ற வேண்டும்.
சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
தற்போது நோய் கட்டுப்பட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, ஆகியவற்றை இயங்க அனுமதி இல்லை.  அப்பகுதியில் வாழும் ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதி.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசரை  ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும்.
ஓட்டுனர்களும், பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்  உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.